படித்ததில் பிடித்தது: பச்சோந்தி –ஆண்டன் செகாவ்
June 19, 2013 Leave a comment
அன்றும் சரி இன்றும் சரி அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கே அனைவரும் பணிந்து போகிறார்கள். அதுவும் குறிப்பாக அரசாங்க அதிகாரிகள். மிகக் குறிப்பாக போலீஸ்காரர்கள். பொது மக்களின் ஊழியர்களாகச் செயல்படவேண்டியவர்கள் அரசாங்கத்தின் கைப்பாவையாகப் பணியாற்றுவது ஜனாநாயக நாட்டில் மட்டுமல்ல, முதலாளித்துவ, கம்யூனிச நாடுகளிலும் இருப்பது கண்கூடு. தம் வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகவே சராசரி ஜனங்கள் இதை எதிர்கொண்டு வாழ்கிறார்கள்.
இந்தச் சிக்கலை, கருத்தை வலியுறுத்துவதாக அமைந்த கதைதான் செகாவின் பச்சோந்தி. இந்த ஆழமான கருத்தை, சிக்கலான கருத்தை, போகிற போக்கில் அற்புதமாகச் சொல்லிச் செல்கிறார் செகாவ். மிக எளிமையான கதை. ஆனால் அது நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. ஒரு சிறு சம்பவத்தை வைத்து தான் சொல்லவந்த கருத்தை இலாவகமாக, அதே சமயம் அழுத்தமாக இந்தக் கதையில் சித்தரிக்கிறார் செகாவ் என்ற படைப்பாளி. Read more of this post
